முன்னுரை
என் மனதில் தோன்றிய ஒரு
ஒற்றை வரி காதல் கவிதையை கதையாக்க முயன்று உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
கார்த்திக் என்ற
வனஉயிரினப் புகைப்படவியலாளர் தான் ஒரே ஒரு முறை கண்டு காதல் வயப்பட்ட வள்ளி
என்னும் பெண்ணைத் தேடித் கொண்டிருக்க அவர் மேல் காதல் வயப்படுகிறாள் பவித்ரா
என்னும் நடிகை. மற்றொரு புறம் ஜெயா என்னும் மாவட்ட ஆட்சியர் தன் பெண் குழந்தையுடன்
தனியே வாழ்ந்து வருகிறாள்.
கார்த்திக்கும்
ஜெயாவுக்கும் என்ன சம்பந்தம்?
பவித்ராவின் காதல் வென்றதா? கார்த்திக் தான்
தேடித் திரிந்த பெண்ணைக் கண்டுக்கொண்டானா? இப்படி பலவித
கேள்விகளுக்கு பரபரப்பான விதத்தில் சுவாரஸ்யம் குறையாத பதில் தான் இந்த கதை.
உங்களுக்கு காடும், காதலும்
பிடிக்குமென்றால் இந்த கதையும் பிடிக்கும்.