நீ நியூட்ராலாய் இருந்தபோதே
நேசித்தவன் நான்
நீயாக உன் காதலை சொல்லும்போது
தவிர்க்கும் காரணம் அறிவாயா?!
உள்ளுக்குள் உள்ள காதலை
மறைத்து - உன்னை
உதறித் தள்ளுவது எனக்கு மட்டும்
சுகமென்றா நினைக்கிறாய்?!
கோடிமுறை உயிர் பிரியும்
வலி உணர்கிறேன் - உன்னை
உன் காதலை ஒவ்வொரு முறை
தவிர்க்கும்போதும்!
உன்னுடனான எனது நிமிடங்கள்
காலத்தால் அழிக்க முடியாதவை!
என்னையே நான் அழித்துக் கொண்டாலும்
என் உயிர் விட்டு பிரிக்க முடியாதவை!
கண்களை காகிதமாக்கி என்
உயிர் கொண்டு வரைந்த ஓவியம் நீ!
என்னையே நான் பிரிந்தாலும்
உன்னை அழிக்க நான் அனுமதிக்கப் போவதில்லை!
தோழியாக காதலியாக
மனைவியாக - சுமந்த
உன் நினைவுகளை அசை போடவே
இந்த ஒரு ஜென்மம் போதப் போவதில்லை!!
மழலையாய் உன் விரல்கள்
நெருங்கிய கனங்களில் உன் வெப்பம்
உச்சிப் பொட்டின் பார்வை
வெள்ளந்தியான உன் சிரிப்பு!
எதை நான் மறக்க?
இனி என் ஒவ்வொரு கவிதையின்
ஆச்சரியக் குறியும் உன் பெயர் சொல்லும்!
நீ வேண்டாம் உயிரே!
உன் நினைவுகள் போதும்!!
இனி வரும் பிறவிகள் அனைத்திலும்
நான் உயிர் வாழ!!!
No comments:
Post a Comment