என் கவிதைகளின் கதாநாயகி
என் காலங்களின் நாட்காட்டி
என் செவிமடுக்கும் அலைபேசி
என் உதடுகள் விரும்பும் பெயராளி
என் உள்நாக்கு தேடும் கானல் நீர்
என் கண்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒளிக்கீற்று.
என் கைகளில் உறைந்திருக்கும் கைரேகை
என் இரவுகளை தாங்கிக்கொள்ளும் தலையணை
என் உள்ளத்தில் உதித்துவரும் புது கவிதை
என் தேகத்தில் விரவியிருக்கும் வேர்நரம்பு
உள்ளுக்குள் உலவி வரும் உயிர்க்காற்று
யுகங்கள் தோறும் தொடர்ந்து வரும் அணுகீற்று
No comments:
Post a Comment